கோவில் கும்பாபிஷேகம்

Wednesday, April 15, 2015

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க சிபிஎஸ்இ அறிவிப்பு

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க சிபிஎஸ்இ அறிவிப்பு

 

 

சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் நெட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதற்கான நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி நடத்தி வருகிறது. அப்படி நடத்தும் போது பல்கலைக் கழக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து அவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவிக்கும். இதுவரை தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்டவை ஒருங்கிணைப்பாளராக இருந்து நெட் தேர்வுகளை நடத்தியுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வு ஜூன் மாதம் 28ம் தேதி நடக்கும் என்றும், இன்று முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட 84 பாடத் தலைப்புகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியுடைவர்கள். தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கி மே மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Read more at:
 http://tamil.careerindia.com/news/cbse-announces-date-net-examinations-000124.html

Sunday, April 5, 2015

மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு

மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு

By அரியலூர்,

First Published : 06 April 2015 12:57 AM IST

மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு ஏப்.16-ல் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் இயங்கி வரும் சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை (2015-16 ஆண்டு) நடைபெற உள்ளது.

தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துபந்து, மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளில் சிறந்த பங்களிப்பு அளித்து வரும் மாணவர்களுக்கும், தடகளம், கால்பந்து, மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் மாணவிகளுக்கும் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு ஏப். 16,17 ஆம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

விடுதியில் சேர,குறைந்த பட்ச தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட தனித்திறன் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வென்றவராக இருக்க வேண்டும். குழுப் போட்டிகளில் பங்கேற்பவராயிருப்பின், முதலிடம் (அல்லது) 2 ஆம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 185 செ.மீ உயரத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதிகள்: இத்தேர்வில் கலந்து கொள்ள விளையாட்டுகளில் ஆர்வமுள்ள, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பயிலும் நபர்களும் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையோராவர்.

வயது வரம்பு: 1.1.2015 அன்று 22 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

சேர்க்கை விண்ணப்பங்களை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nandri : dinamani

Friday, April 3, 2015

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

By அரியலூர்

First Published : 04 April 2015 05:10 AM IST

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. நூற்றாண்டு பழமையான இக்கோயிலின் ஆண்டு திருவிழா மார்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பெருமாள் சூரிய வாகனம், வெள்ளி பல்லக்கு, வெள்ளி சிம்ம வாகனம், புன்னை மர வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் கலியுக வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக பக்தர்கள் பெருமாளுக்கு பழம், இனிப்பு வகைகள், பட்டாடைகள், பூக்கள், உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். இதில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.

 

WWW.DINAMANI.COM