கோவில் கும்பாபிஷேகம்

Saturday, June 30, 2018

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

செயல்பாடுகள்
  1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
  2. இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
  3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல்
  4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்
  5. கடன் திட்டங்கள்
  6. நரிக்குறவர் நல வாரியம்
  7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
  8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம்
  9. உணவு மானியம் வழங்குதல்
  10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்
  11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம்
  12. சீருடை வழங்குதல்
  1. கல்வி உதவித்தொகை
    திட்டத்தின் பெயா் மற்றும் விபரம்தகுதிகள்
    அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு படிப்புக்கட்டணம் வழங்கப்படுகிறது. மேலும், கல்வி நிலையங்கள் இணைந்துள்ள விடுதிகளில் தங்கி 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உண்டி, உறையுள் கட்டணம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்புகள் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
    1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
    2. ஆண்டு வருமானம் ரூ.200000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    3. குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து திரும்ப செலுத்தப்படாத கட்டணங்கள் வழங்கப்படும்.
    அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது..அ) சிறுபான்மையினத்தவராக இருக்க வேண்டும்.
    ஆ)
    1. பள்ளி படிப்பு – ஆண்டு வருமானம் – ரூ.100000/-க்கு மிகாமலும்,
    2. பள்ளி மேற்படிப்பு – ஆண்டு வருமானம் – ரூ.200000/-க்கு மிகாமலும்,
    3. முந்தைய ஆண்டில் இறுதித்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
    பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
    கிராம புறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500/-ம் 6ம் வகுப்பு பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000/-ம் வழங்கப்படுகிறது.
    பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.72000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. இலவச மிதிவண்டிகள்
    அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 11ம் பயிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவசமாக மிதிவண்டி வழங்கப்படுகிறது.
  3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல்
    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த சலவை தொழில் செய்யும் நபர்களுக்கு சலவைப்பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
    தகுதிகள்
    கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்
    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த தையற்கலை தெரிந்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
    தகுதிகள்
    1. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.40000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    2. நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.60000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  5. கடன் திட்டங்கள்
    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TABCEDCO) சென்னை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) சென்னை அலுவலகங்கள் மூலம் கீழ்காணும் கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
    1. தனிநபர் கடன்
    2. சுய உதவிக்குழுக்களுக்கு சிறு வணிக கடன்
    3. நீர்பாசனக்கடன்
    தகுதிகள்
    1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
    2. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.81,000/-க்கு மிகாமலும், நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1,03,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
    3. வயது வரம்பு 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.
  6. நரிக்குறவர் நல வாரியம்
    தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7500/- முழு மானியமாக நல வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனிநபர் மானியமாக ரூ.10000/- அல்லது குழுவிற்கு ரூ. 1,25,000/- அல்லது திட்ட மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
    இவ்வாரிய உறுப்பினர்களுக்கு கீழ்க்காணும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • மாத ஓய்வூதியம் ரூ.1000/-
    • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.100000/-
    • இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.15000/-
    • ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.2000/-
    • திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு மற்றும் கண் கண்ணாடிக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10000/- முதல் ரூ.100000/- வரை வழங்கப்பட்டு வருகிறது.
    • இவ்வாரிய உறுப்பினாகளின் குழந்தைகளுக்கு உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர்கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
  7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
    தமிழ்நாட்டில் வாழும் வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ரூ.1 இலட்சம் விதை தொகை வழங்கப்பட்டுள்ளது,
    • சங்கங்களின் வளர்ச்சிக்காக சங்கத்தின் மூலம் திரட்டப்படும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.20 இலட்சம் இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
  8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம்
    இஸ்லாமியர்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்களில் பணிபுரியும் ஆலீம்கள், பேஷ், இமாம்கள், அரபி, ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், தர்க்காக்கள், ஆஷீர்கானாக்கள், அடக்கத் தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையங்களில் முன்னேற்றம் அடைவதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகின்றது.
    இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் குடும்ப வாரிசுகளுக்கு கீழ்க்காணும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    1. கல்வி உதவித்தொகை ரூ.1000/- to ரூ.6000/-
    2. திருமண உதவித்தொகை ரூ.2000/-
    3. கண் கண்ணாடி செலவு உதவித்தொகை ரூ.500/-
    4. மகப்பேறு உதவித்தொகை ரூ.6000/-
    5. மாத ஓய்வூதியம் ரூ.1000/-
    6. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.1000/-
    7. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.10000/- to ரூ.100000/-
    8. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.15000/-
  9. உணவு மானியம் வழங்குதல்
    அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியரால் நிர்வகிக்கப்படும் திருவள்ளுவர் அனாதை இல்லம் லிங்கத்தடிமேடு இல்லத்திற்கு ஓர் கல்வி ஆண்டில் மாணவர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு உணவு மானியமாக ரூ.650/- வழங்கப்பட்டு வருகிறது.
  10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்
    மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின்கீழ் குழு ஏற்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை மூலம் நிலகையகப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த நரிக்குறவர், ஒட்டர், வண்ணார் மற்றும் நாவிதர் ஆகியவர்களுக்கு தகுதிகுட்பட்டு தலா 3 செண்ட் நிலம் வழங்கப்பட்டு வருகிறது.
  11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம்
    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு நல்ல உணவளிக்கும் பொருட்டு கட்டணத்தொகையினை கல்லூரி விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.1000/- ஆகவும், பள்ளி விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.900/- ஆக உயர்த்தியும் மற்றும் நாள்தோறும் வழங்கப்படும் உணவுகளுக்கான உணவுப்பொருட்களும் அங்கீகரிக்கப்பட்டது.
    சிறப்பு உணவு கட்டணம்
    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட பண்டிகை நாட்களில்
    1. பொங்கல்
    2. குடியரசு தினம்
    3. தமிழ் வருடப்பிறப்பு
    4. சுதந்திர தினம்
    5. தீபாவளி
    சிறப்பு உணவு வழங்க நபர் ஒருவருக்கு கல்லூரி விடுதிக்கு ரூ.40/-ம் பள்ளி விடுதிக்கு ரூ.20/-ம் அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  12. சீருடை வழங்குதல்
    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் மாணவ/மாணவியர்களுக்கு தலா நான்கு இணை சீருடை வழங்கப்பட்டு வருகிறது.
நிர்வாக அமைப்பு
நிர்வாக அமைப்பு
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் பெயா்
  1. கல்லூரி மாணவர் விடுதி, அரியலூர்
  2. பள்ளி மாணவர் விடுதி, மேலணிக்குழி
  3. பள்ளி மாணவர் விடுதி, அரியலூர்
  4. பள்ளி மாணவர் விடுதி, திருபுரந்தான்
  5. பள்ளி மாணவர் விடுதி, வரதராஜன்பேட்டை
  6. பள்ளி மாணவர் விடுதி, ஏலாக்குறிச்சி
  7. பள்ளி மாணவர் விடுதி, செந்துறை
  8. பள்ளி மாணவர் விடுதி, சுண்டக்குடி
  9. பள்ளி மாணவியர் விடுதி, மேலணிக்குழி
  10. பள்ளி மாணவர் விடுதி, ஏலாக்குறிச்சி
  11. பள்ளி மாணவியர் விடுதி, மீன்சுருட்டி
  12. பள்ளி மாணவியர் விடுதி, இரும்புலிக்குறிச்சி
  13. பள்ளி மாணவியர் விடுதி, தா.பழுர்
  14. பள்ளி மாணவியர் விடுதி, ஆண்டிமடம்
  15. பள்ளி மாணவியர் விடுதி, வரதராஜன்பேட்டை
மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் பெயா்
  1. கல்லூரி மாணவர் விடுதி, அரியலூர்
  2. கல்லூரி மாணவியர் விடுதி, அரியலூர்
  3. பள்ளி மாணவர் விடுதி, பொன்பரப்பி
  4. பள்ளி மாணவர் விடுதி, உடையார்பாளையம்
  5. பள்ளி மாணவர் விடுதி, திருமழப்பாடி
  6. பள்ளி மாணவர் விடுதி, திருமானூர்
  7. பள்ளி மாணவர் விடுதி, மீன்சுருட்டி
  8. பள்ளி மாணவர் விடுதி, கீழப்பழுவூர்
  9. பள்ளி மாணவர் விடுதி, ஆண்டிமடம்
  10. பள்ளி மாணவர் விடுதி, ஜெயங்கொண்டம்
  11. பள்ளி மாணவர் விடுதி, மருதூர்
  12. பள்ளி மாணவர் விடுதி, சுத்தமல்லி
  13. பள்ளி மாணவர் விடுதி, இரும்புலிக்குறிச்சி
  14. பள்ளி மாணவர் விடுதி, கோடாலிகருப்பூர்
  15. பள்ளி மாணவர் விடுதி, தா.பழுர்
  16. பள்ளி மாணவியர் விடுதி, பொன்பரப்பி
  17. பள்ளி மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம்
தொடர்பு முகவரி
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
அரியலூர்.

Monday, June 25, 2018

நெடுஞ்சாலைத்துறை - பொய்யூர் – சுண்டக்குடி சாலை

நெடுஞ்சாலைத்துறை

அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டம் 11.01.1997 முதல் அரியலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இக்கோட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய உட்கோட்டங்களையும் அரியலூர் பிரிவு-I, பிரிவு-II, ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பிரிவு அலுவலகங்களையும் உள்ளடக்கியது ஆகும். இக்கோட்டத்தின் மூலம் பல்வேறு சாலை உட்கட்டமைப்பு திட்டங்களான சாலை அகலப்படுத்துதல், மறுகட்டமைப்பு செய்தல், மேம்பாடு செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மூலமாகவும் சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இக்கோட்டத்தில் 761.519 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் மாநில நெடுஞ்சாலைகள் (157.440 கி.மீ), மாவட்ட முக்கிய சாலைகள் (131.190 கி.மீ) மற்றும் மாவட்ட இதர சாலைகள் (472.889 கி.மீ) ஆகியவை ஆகும்.
தொழில்துறையினை தொன்மையாகக் கொண்டுள்ள ஒரு முக்கிய மாவட்டமாகும். இங்கு கிடைக்கப்பெறும் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் அதிகமாக உள்ளது. தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டியுள்ளது. தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக பன்மடங்கு அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்திற்கேற்ப சாலைகளின் திறன் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி விரைவான போக்குவரத்தை உறுதி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிமெண்ட் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் தொழில்துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்படி உற்பத்தி செய்யப்படும் அதிகபட்ச சிமெண்ட் சாலை வழியிலேயே கொண்டு செல்லப்படுகிறது.
அரியலூர் நெடுஞ்சாலை, கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டத்தின் மூலம் சாலைகளின் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அளப்பரிய பணிகளை செய்து வருகிறது.
திட்டத்தின் பெயர்:
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சித் திட்டம் (சி.ஆர்.ஐ.டி.பி திட்டம்) 2017-18.
நிர்வாக ஒப்புதல் அரசாணை எண். 86/நெடுஞ்சாலை (ம) சிறுதுறைமுகங்கள் (எச்.எப்.2) துறை, நாள். 24.10.2017.
வேலையின் பெயர்
  1. அரியலுர் – முத்துவாஞ்சேரி – ஸ்ரீபுரந்தான் சாலை கி.மீ 28/0-28/8 வரை உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 28/2-ல் சிறுபாலம் திரும்பக் கட்டுதல் (மா.நெ எண். 139)
  2. பெரம்பலூர் – மானாமதுரை சாலை கி.மீ 27/300- 29/210 வரை (ஒய் பிரிவு சேர்த்து 230மீ) இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி, உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 28/2, 28/4 மற்றும் 28/6-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் (SHU)
  3. விக்கிரமங்கலம் – கடம்பூர் சாலை கி.மீ 0/0-3/0 வரை உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 0/6, 0/10, 1/4, 2/4 மற்றும் 2/10-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  4. மேலக்கருப்பூர் – வடுகர்பாளையம் சாலை கி.மீ 0/0-1/4 மற்றும் கி.மீ 5/0-6/0 வரை மேம்பாடு செய்தல்.
  5. மேலக்கருப்பூர் – வடுகர்பாளையம் சாலை கி.மீ 1/2-ல் ஓடையின் குறுக்கே உள்ள பழுதடைந்த தரைப்பாலத்தை சிறுபாலமாக திரும்பக் கட்டுதல்.
  6. அரியலூர் – சுப்புராயபுரம் சாலை கி.மீ 6/0- 9/6 வரை உறுதிப்படுத்துதல், கி.மீ 6/2-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 8/8-ல் தடுப்பு சுவர் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  7. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 0/2-ல் சாலை சந்திப்பினை மேம்பாடு செய்தல்
  8. விருத்தாச்சலம் – ஜெயங்கொண்டம் – மதனத்துர் சாலை கி.மீ 47/8 – 48/8 வரை உறுதிப்படுத்துதல்
  9. செந்துறை – உடையார்பாளையம் – அனைக்கரை சாலை கி.மீ 19/350 – 21/0 வரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், கி.மீ 20/10-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 19/6, 19/8-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  10. செந்துறை – உடையார்பாளையம் – அணைக்கரை சாலை கி.மீ 21/0 – 23/0 வரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 22/8-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  11. கல்லாத்தூர் – பாப்பாக்குடி – மேலணிக்குழி சாலை கி.மீ 2/10,3/2-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  12. கல்லாத்தூர் – பாப்பாக்குடி – மேலணிக்குழி சாலை கி.மீ 3/4-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  13. கல்லாத்தூர் – பாப்பாக்குடி – மேலணிக்குழி சாலை கி.மீ 3/6-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  14. அணைக்குடம் – சோழமாதேவி – கோடாலிக்கருப்பூர் சாலை கி.மீ 4/0-6/0 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 4/2, 4/4, 5/6, 5/8-ல் குழாய் பாலம் திரும்ப கட்டுதல்.
  15. உட்கோட்டை – தழுதாழைமேடு சாலை கி.மீ 3/0-5/0 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 4/8, 4/10-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  16. செந்துறை – உடையார்பாளையம் – அணைக்கரை சாலை கி.மீ 11/0-12/4 மற்றும் 14/4-15/0 வரை மேம்பாடு செய்தல்
  17. செந்துறை – அங்கனூர் – அகரம்சீகூர் – திருமாந்துறை சாலை கி.மீ 1/4-ல் தடுப்பு சுவர் கட்டுதல் (மா.மு. எண். 1121).
  18. செந்துறை – நக்கம்பாடி – காடூர் சாலை கி.மீ 1/0-2/100 வரை ஒருவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 1/2 மற்றும் 1/10-ல் குழாய் பாலங்கள் திரும்பக் கட்டுதல்.
  19. வாரியங்காவல் – மாத்தூர் சாலை கி.மீ 5/0-7/0 வரை மேம்பாடு செய்தல்
  20. செந்துறை – உஞ்சினி – உடையார்பாளையம் சாலை முதல் பிலாக்குறிச்சி சாலை கி.மீ 0/0-1/3 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/3-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  21. வாரியங்காவல் – மாத்தூர் சாலை கி.மீ 14/8-ல் காட்டு ஓடையின் குறுக்கே உள்ள பழுதடைந்த குறுகலான சிலாப் கல்வெர்ட்டினை சிறுபாலமாக திரும்பக் கட்டுதல்.
  22. மாத்தூர் – கோட்டைக்காடு சாலை கி.மீ 0/6-லிருந்து அயன்தத்தனூர் சாலை கி.மீ 2/6-ல் தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் கி.மீ 2/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  23. செந்துறை – உஞ்சினி – உடையார்பாளையம் சாலை முதல் பிலாக்குறிச்சி சாலை கி.மீ 3/2-ல் தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் கி.மீ 0/4-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்.
  24. செந்துறை – நக்கம்பாடி – காடூர் சாலை கி.மீ 2/100-3/0 வரை ஒருவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 2/6-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 2/10-ல் உள்ள பழுதடைந்த தரைப்பாலத்தை சிறுபாலமாக திரும்பக் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  25. செந்துறை – நக்கம்பாடி – காடூர் சாலை கி.மீ 3/0-4/0 வரை ஒருவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 3/2, 3/6 மற்றும் கி.மீ 3/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  26. ஜெயங்கொண்டம் – விருத்தாச்சலம் சாலை முதல் அகரம் (வழி) அழகாபுரம் கி.மீ 3/2-ல் ஓடையின் குறுக்கே சிறுபாலம் திரும்பக் கட்டுதல்
  27. திருமானூர் – ஏலாக்குறிச்சி – தூத்தூர் சாலை கி.மீ 1/0 – 3/4 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/6, 1/8 (i), 1/8 (ii), 2/10 (i), 2/10 (ii), 3/2 (i) மற்றும் 3/2 (ii)-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  28. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 0/2- 1/8 வரை இடைவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல்
  29. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 2/0-3/2 வரை இடைவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல்.
  30. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 1/10-ல் சாலை வளைவை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/10-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  31. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 3/2-4/4 வரை இடைவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல்
  32. கீழக்காவட்டான்குறிச்சி – ஆலம்பாடி மேட்டுத்தெரு சாலை கி.மீ 12/0-15/4 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 12/10, 13/2, 13/4, 14/8 மற்றும் 15/2-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  33. விளாங்குடி – அன்னக்காரன்பேட்டை சாலை கி.மீ 17/0-19/0 வரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், கி.மீ 17/8, 18/6-ல் ஒரு வரிசை குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  34. கி.மீ 90/8-ல் திருச்சி – சிதம்பரம் சாலை முதல் ஆயுதகளம் சாலை (வழி) கடாரன்கொண்டான் கி.மீ 0/0-2/185-ல் மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்.
  35. இடையார் – காடுவெட்டான்குறிச்சி சாலை கி.மீ 10/0-13/0 வரை சாலை மேம்பாடு செய்தல், கி.மீ 10/10, 11/6, 12/2-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 10/2, 10/4-ல் வடிகால் அமைத்தல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  36. தத்தனூர் – வாணதிராயன்பட்டினம் சாலை கி.மீ 2/0-6/0 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 3/6, 4/2, 4/4-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  37. பருக்கல் – வாழாவெட்டிக்குப்பம் சாலை கி.மீ 0/0-1/785 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 0/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  38. அணைக்குடம் – நாயகனைப்பிரியாள் – வாணதிராயன்பட்டினம் சாலை கி.மீ 0/0-3/0 வரை மேம்பாடு செய்தல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  39. ஆர்.எஸ். மாத்தூர் – கோட்டைக்காடு சாலை (வழி) தாமரைப்பூண்டி கி.மீ 5/0-6/0 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 5/4-ல் சிலாப் கல்வெர்ட் மற்றும் கி.மீ 5/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  40. ஆர்.எஸ். மாத்தூர் – கோட்டைக்காடு சாலை (வழி) தாமரைப்பூண்டி கி.மீ 9/0-10/4 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் கி.மீ 9/6, 9/10 மற்றும் 10/4-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  41. வாரியங்காவல் – மாத்தூர் சாலை முதல் சிலம்பூர் சாலை (வழி) இடையாக்குறிச்சி கி.மீ 3/0-5/0 வரை மேம்பாடு செய்தல்
  42. அங்கனூர் – தாமரைப்பூண்டி சாலை (வழி) சன்னாசிநல்லூர் கி.மீ 2/6-3/6 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் கி.மீ 2/8(i),2/8(ii),2/10,3/2(i),3/2(ii) மற்றும் 3/6-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  43. அங்கனூர் – தாமரைப்பூண்டி சாலை (வழி) சன்னாசிநல்லூர் கி.மீ 3/6-5/0 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் கி.மீ 3/8, 4/2, 4/6 மற்றும் 4/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  44. மாத்தூர் – கோட்டைக்காடு சாலை முதல் முதுகுளம் ஹரிஜன காலனி கி.மீ 0/0-2/8 வரை மேம்பாடு செய்தல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
அலுவலக முகவரி :
கோட்டப் பொறியாளர் அலுவலகம்,
நெடுஞ்சாலைத்துறை,கட்டுமானம் (ம) பராமரிப்பு,
35 கே3, திருச்சி மெயின் ரோடு,
(நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில்),
அரியலூர் – 621 704.
தொலைபேசி எண். 04329 220064
இமெயில் : tndehcmariyalur[at]gmail[dot]com

Saturday, June 23, 2018

இடையத்தான்குடியில் கோடை உழவு பயிற்சி

இடையத்தான்குடியில் கோடை உழவு பயிற்சி
By DIN  |   Published on : 22nd June 2018 09:18 AM  |   அ+அ அ-   |  

அரியலூர் மாவட்டம், இடைத்தான்குடி கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோடை உழவுப் பணி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,000 ஹெக்டரில் கோடை உழவுப் பணிகள் தொடங்கியதையடுத்து விவசாயிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண் மையம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் சி. பாஸ்கரன் தலைமை வகித்தார். 
வேளாண் அலுவலர் அ. சவீதா பங்கேற்று, கோடை உழவின் நன்மைகளான மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிப்பது, மண் அரிப்பு தடுக்கப்படுவது, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். 
வேளாண் துணை அலுவலர் அ. இளவரசன்,கோடை உழவிற்கு ஏக்கருக்கு  ரூ.500 மானியம் வழங்கப்படும். பருத்தி மக்காச்சோளம் பயிர்  காப்பீடு செய்ய 16.8.2018 கடைசிநாள் என்பதையும், பருத்திக்கு ஏக்கருக்கு 1240 மற்றும்  மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.406-செலுத்தி பயன் பெறலாம் என்றார். கால்நடை மருத்துவர்  ஜெயசுந்தரி, கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றியும் விளக்கம் அளித்தார்.
வேளாண் உதவி அலுவலர் எஸ். சுப்ரமணியம் பங்கேற்று, மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  செயல்பாடுகள் குறித்தும், கோடை உழவு மானியம் பெற சிட்டா,வங்கி கணக்கு எண் மற்றும்  ஆதார் அட்டை நகல் மற்றும் போட்டோ ஆகியவற்றை மானாவாரி குழு தலைவரிடம் ஒப்படைத்து பயன் பெறலாம் என்றார். பயிற்சிக்கு இடையத்தான்குடி, சிறுவளுர் பகுதியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் மற்றும் மானாவாரி விவசாய குழுத் தலைவர் சிவப்பெருமாள் ஆகியோர் செய்தனர்.

Monday, June 18, 2018

விடியோ, போட்டோகிராபி, கணினி பயிற்சிக்கு அழைப்பு

விடியோ, போட்டோகிராபி, கணினி பயிற்சிக்கு அழைப்பு

By DIN  |   Published on : 17th June 2018 03:51 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக அளிக்கப்படவுள்ள விடியோ மற்றும் போட்டோ கிராபி, கணினி பயிற்சிக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. பயிற்சியின்போது மதிய உணவு, தேநீர், நவீன தங்குமிட வசதி கட்டணமின்றி வழங்கப்படும். 18-ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. 18 முதல் 45 வரையுள்ளோர் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும். நேர்காணலுக்கு வரும்போது, குடும்ப அட்டை நகல், கல்வி சான்று நகல், வறுமை கோட்டு எண்,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 4 ஆகியவற்றுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஆர்.டி.ஓ.அலுவலகம் பின்புறம்,கீழப்பழுவூர்,அரியலூர். தொடர்புக்கு 94458-62417, 99448-50442, 90474-15423 96264-97684 என்ற எண்களில் தொடர்புக்கொள்ளலாம் என பயிற்சி நிறுவன இயக்குநர் ஏ.பு.வெங்கிடாசலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

Sunday, February 11, 2018

அறிவியல் கண்காட்சியில் வென்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு

அறிவியல் கண்காட்சியில் வென்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு

கும்பகோணத்தில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியில் முதல் பரிசு பெற்ற அரியலூர் கீழப்பழுவூர் அருணாச்சலா மெட்ரிக். பள்ளி மாணவி கௌரவிக்கப்பட்டார்.


கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள அருணாச்சலா மெட்ரிக். பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி கு. தாரா ஸ்ரீ முதல் பரிசு பெற்றார். மேலும் அவர்,

இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மாணவி தாரா ஸ்ரீ, தனது பரிசு, கேடயத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, பள்ளி தாளாளர் டி. அருணாச்சலம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளிடம் காண்பித்து பாராட்டு பெற்றார்.

Thursday, January 18, 2018

அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்

அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்



 எம்.திலீபன்



சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடும் வரையிலும் விடப்போவதில்லை என்று பனங்கூர் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம் பனங்கூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தைச் சுற்றி ராம்கோ, செட்டிநாடு, டால்மியா மற்றும் அரசு சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான 7-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இதில் சுரங்கம் தோன்றுவதற்காக இரவு நேரத்தில் வெடி வைப்பதால் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இரவு பகல் பாராமல் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படுகின்றன.

அடிக்கடி பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. அரசின் விதிகளை மீறி அதிக ஆழத்தில் சுணணாம்புக்கல் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை ஏற்படுகின்றன. இவ்வாறு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அரசு ஆய்வு செய்து அரசின் விதிமுறைகளை மீறிய சுரங்கங்களை மூட வேண்டும். அந்த ஆலையின் உரிமத்தைத் தடை செய்ய வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனங்கூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி வைக்க எதிர்ப்பு: பனகூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி வைக்க எதிர்ப்பு: பனகூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்



அரியலூர் அருகே சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் வெடிவைப்பதால் தங்களது வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து, பனங்கூர் கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

அரியலூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புச் சுரங்கம் பனங்கூர் கிராமப் பகுதியில் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கற்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்நிலையில், சுரங்கத்தில் சுண்ணாம்புக்கற்களை வெட்டிஎடுக்க அவ்வப்போது வெடி உபயோகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால்,பனங்கூர் கிராமத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படுவதாவும், பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வெடி சத்தத்தால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை என்றும், கிராமத்தில் உள்ள சாலையில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றி வேகமாகச் செல்லும் லாரிகளால் அதிகமான புழுதிகள் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகம்,தனியார் சிமென்ட் அலை நிர்வாகம் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பனங்கூர் கிராம மக்கள், புதன்கிழமை சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் சுண்ணாப்புக் கல் சுரங்க அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்படாத பொதுமக்கள் அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

Friday, January 12, 2018

ஆலந்துரையார்கட்டளை கிராமத்தில் அம்மா திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

அம்மா திட்ட முகாமில்  நலத் திட்ட உதவிகள்  


அரியலூர் வட்டம், வாலாஜாநகரம், ஆலந்துரையார்கட்டளை, உடையார்பாளையம் வட்டம் எரவாங்குடி, இடங்கண்ணி, ஆண்டிமடம் வட்டம் அழகாபுரம், செந்துறை வட்டம் நக்கம்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்,சாதி சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Sunday, January 7, 2018

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம்


எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் மேல்நிலை தேர்ச்சி, பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பதாரர்கள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் எனில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2017 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து  வகுப்பினர்க்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது.

ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000- க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.
பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும்  கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் , வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் 28.2.2018-க்குள் முற்பகலில் வேலைநாள்களில் நேரில் புதிய விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என ஆட்சியர் க.லட்சுமிபிரியா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 2, 2018

அரசு மருத்துவமனையில்  அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிப்பிரியா அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். 


கடந்த சில நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் திங்கள்கிழமை அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றார்.   அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக குடல்வால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர் அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்யுமாறு கூறினார்.

இதைத் தொடர்ந்து அன்றிரவு அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆட்சியர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள்,பொதுமக்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்ட ஆட்சியரின் செயல்  மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இதை அரசியல்வாதிகளும் கடைப்பிடித்தால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் என்கின்றனர் பொதுமக்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

Monday, January 1, 2018

மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம்  அமைக்க விண்ணப்பிக்கலாம்


சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் அமைக்கும் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் வகையில், ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் 1,820 மெ.டன் யூரியா, 803 மெ.டன் டி.ஏ.பி, 719 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1034 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல்விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 229 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 92 மெ.டன் என 321 மெ.டன் விநியோகம்  செய்யப்பட்டுள்ளது.

 தற்போது வேளாண் விரிவாக்க மையங்களில் 29 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 4 மெ.டன் ஆக மொத்தம் 33 மெ.டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளது.  தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகளை அமைக்கும் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு  மானியமாக வழங்கும் வகையில், ரூ.7.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

சிறு,குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் பாசனக் கருவிகளை தங்களது வயல்களில் நிர்மானித்துக் கொள்ள மானியம் வழங்கப்படும். 

விவசாயிகள் தங்கள் பங்குத் தொகை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு,குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த் துறையில் சான்று பெற்று பாசனக் கருவிகளை அமைக்க விண்ணப்பிக்க வேண்டும்.  
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளதற்கான சான்று உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் க.லட்சுமிபிரியா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதியில்லாத ஓரியூர் அரசுப் பள்ளி

அடிப்படை வசதியில்லாத ஓரியூர் அரசுப் பள்ளி

photo (C) - Google Search

அரியலூர் அருகேயுள்ள ஓரியூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எந்தவித அடிப்படை வசதியுமின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

அரியலூரை அடுத்த சுண்டக்குடி அருகே ஓரியூர் கிராமத்தில் 5 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்கப் பள்ளியில்,  100-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர்.  இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  

குடிநீர் குழாய்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. 

பள்ளியில் இருக்கும் கழிவறைகள், முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இயற்கை உபாதையைக் கழிப்பதிலும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதுதவிர பள்ளி வளாகத்தினுள் புதர் மற்றும் முள்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.  சுற்றுச்சுவர் இல்லாததால் இரவுநேரங்களில் சமூக விரோத செயல்கள்  நடைபெறுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல முறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. 
 எனவே, இனியாவது ஓரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.