கோவில் கும்பாபிஷேகம்

Saturday, September 12, 2015

திருமானூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருமானூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

 

திருமானூர், 

திருமானூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் சாலை மறியல்

திருமானூர் அருகே கீழப்பழுர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது இடையத்தாங்குடி கிராமம். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள பொய்யூர் கிராமத்தில் இருந்து குடிதண்ணீர் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு இடையத்தாங்குடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, அங்கிருந்து அந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இடையத்தாங்குடி கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி தடையில்லாமல் குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடையத்தாங்குடியில் அரியலூர் சுண்டக்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், ராஜாராம், செல்வம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களிடம் போலீசார் கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Monday, August 3, 2015

மானாவாரி கடலை சாகுபடியாளருக்கு மானியத்தில் நல உதவிகள் பயன்பெற அழைப்பு

மானாவாரி கடலை சாகுபடியாளருக்கு மானியத்தில் நல உதவிகள் பயன்பெற அழைப்பு

பதிவு செய்த நேரம்:2015-08-01 11:30:56

VIDEO : Police arrest dreaded Maoist commander in Jharkhand

அரியலூர், :  அரியலூர் மாவட்டத்தில் மானாவாரியில் கடலை விதைக்கும் கருவிக்கொண்டு விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால் இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைைம வகித்த கலெக்டர் சரவணவேல்ராஜ் பேசியதாவது:இம் மாவட்டத்தில் இம்மாதம் வரை பெறப்பட்ட மழையை கொண்டு மானவாரிப் பயிர்களான கடலை, உளுந்து, மக்காசோளம், கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றை பயிரிட இதுவே ஏற்றத் தருணமாகும். மானாவாரியில் கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடலை விதைக்கும் கருவிக்கொண்டு கடலை மற்றும் ஊடுபயிராக துவரை விதைப்பு செய்ய விதைப்பு மானியம் ரூ.ஆயிரம் எக்டருக்கு பின்னேற்பாக வழங்க தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்ட எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்திற்கு பொருள் இலக்கீடாக ஆயிரம் எக்டருக்கு, பின்னேற்பு மானியத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முறையில் கடலை விதைப்பு செய்யும் விவசாயிகள் தங்களின் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் கடலை விதைக்கும் போது எடுக்கப்படும் புகைப்படம் ஆகியவற்றுடன் பின்னேற்பு மானியத்தொகை பெறுவதற்கான உரிய படிவத்தில் பூர்த்திசெய்து தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் அளித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். மேலும், இந்த இலக்கீடானது அரியலூர் வட்டாரத்துக்கு 200 எக்டேரும், ஜெயங்கொண்டம் வட்டாரத்துக்கு 300 எக்டேரும், ஆண்டிமடம் வட்டாரத்துக்கு 300 எக்டேரும், தா.பழூர் வட்டாரத்துக்கு 200 எக்டேரும் வீதம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

கடலை விதைக்கும் கருவிக்கொண்டு விதைப்புசெய்ய குறைவான நேரமே ஆகும். கூடிய ஆட்கள் தேவை மற்றும் செலவு குறைக்கப்படுகிறது. பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. சரியான ஆழத்தில் விதைக்கப்படுவதால் நல்ல முளைப்பு திறனும், பயிர் போதுமான இடைவெளியுடன் இருக்கும். மேலும், களைமுளைப்புத் திறனும் குறைக்கப்படுகிறது. கைக்களை எடுப்பதில் சிரமம் ஏற்படுவதில்லை. எனவே இத்திட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் வட்டார விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.கூட்டத்தில் டிஆர்ஓ ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், வேளாண் இணை இயக்குநர் (பொ) மனோகரன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் அருகே வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

அரியலூர் அருகே வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

அரியலூர் அருகேயுள்ள வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.

கிராம பொது சேவை மையம்

அப்போது, அரியலூர் அருகேயுள்ள வைப்பம் மற்றும் ஆரனூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிம் மனு கொடுத்தனர். அதில், அரியலூரில் உள்ள இடையத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இடையத்தாங்குடி, வைப்பம், ஆரனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இடையத்தாங்குடி ஊராட்சியில் கிராம பொது சேவை மைய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கட்டிடம் கட்டுவதற்கு தகுதியான இடம் இடையத்தாங்குடி கிராமத்தில் இல்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டு, வைப்பம் கிராமத்தில் கிராம பொதுசேவை மையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்ளக்கூடிய நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இடையூறு செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த பொது சேவை மைய கட்டிடத்தை தங்களது ஊரில் (வைப்பம்) கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சமுதாய கூடம்

செந்துறை அருகே வீராக்கன் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அனைத்து சமுதாயத்தினரும் பயனடையும் வகையில் தங்களது பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுதவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
 

இதேபோல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறினார். மேலும் இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 12 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.26 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் உள்பட மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், புதுவாழ்வு திட்ட அலுவலர் சுதாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Saturday, June 20, 2015

அரியலூர் மாவட்டத்தில் 2–வது கட்டமாக 101 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி

அரியலூர் மாவட்டத்தில் 2–வது கட்டமாக 101 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 20, 2:50 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது8 Share/Bookmark printபிரதி
அரியலூர் மாவட்டத்தில் 2–வது கட்டமாக 101 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி
அரியலூர், ஜூன் 20–

அரியலூர் மாவட்டத்தில் 2015–ஆம் ஆண்டிற்கு இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 101 கிராம பஞ்சாயத்துகளுக்கு கிராமப்புற விளையாட்டுப்போட்டிகள் (20.06.2015 மற்றும் 21.06.2015 ஆகிய நாட்களில்) நடத்தப்படவுள்ளது.

அரியலூர் ஒன்றியத்தில் ஆலந்துரையார்கட்டளை, இடையத்தாண்குடி, அஸ்தினாபுலம், சீனிவாசபுரம், உசேனாபாத், ஆண்டிப்பட்டாக்காடு, இலுப்பையூர், மணக்கால், நாகமங்கலம், உள்பட 18 கிராம ஊராட்சிகளிலும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஓலையூர், புதுக்குடி, ஸ்ரீராமன், தேவனூர், கருக்கை, கடுகூர், கோவில் வாழ்க்கை, மேலூர், உள்பட 18 கிராம ஊராட்சிகளிலும்,

செந்துறை ஒன்றியத்தில் ஆதனக்குறிச்சி, அசாவீரன் குடிக்காடு, கீழமாளிகை, மணக்குடையான், நாகல்குழி, நமங்குணம், சன்னாசிநல்லூர், அயன்தத்தனூர், மணப்பத்தூர், நக்கம்பாடி, பாளையக்குடி, சிறுகடம்பூர், துளார், வீராக்கன் ஆகிய 14 கிராம ஊராட்சிகளிலும், தா.பழூர் ஒன்றியத்தில் ஆதிச்சனூர், இடங்கன்னி, வாளைக்குறிச்சி, அம்பாப்பூர், உள்பட 17 கிராமப்பஞ்சாயத்துகளிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

போட்டிகள் கிராம பஞ்சாயத்தினை சேர்ந்த 30 வயதிற்கு கீழ் உள்ள ஆண் ,பெண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். போட்டிகளில் கலந்துகொள்ள அந்தந்த கிராமத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் தங்கள் தேர்தல் அடையாள அட்டை அல்லது பொது விநியோக அடையாள அட்டையை காண்பித்து அதன் அடிப்படையில் போட்டியாளர்கள் ஊராட்சி எழுத்தரிடம் தங்கள் பெயர் (ஆண்,பெண்) வயது, விலாசம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கால் பந்து (ஆண்கள் மட்டும் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக இரு தடகளப் பிரிவுளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் கிராம ஊராட்சிகளில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானம், பொதுதிடல் ஆகியவற்றில் நடைபெற உள்ளது.

ஊராட்சிகளில் அமைந்துள்ள சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இப்போட்டிகளில் முழுமையாக பங்கேற்கலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறுபவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

போட்டிகளில் விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் அவரவர் கிராம ஊராட்சிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

Tuesday, June 9, 2015

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், ஏலாக்குறிச்சி - அடைக்கலமாதா கோயில், ஜெயங்கொண்டம், காமரசவல்லி

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆசியாவிலேயா அதிகமாக சிமெண்ட் உற்பத்தி செய்யும் இடங்களில் இந்த மாவட்டத்திற்கும் பங்குண்டு,மேலும் முந்திரிகாடுகள் பெருமக்களின் வாழ்வாதாரம் ஆகும்.சமீபத்தில் இங்கு செந்துறை அருகே டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு முன்னணி சிமெண்ட் தொழிற்சாலைகள் இங்குதான் அமைந்துள்ளன.

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கை அரசர்களை வெற்றி கொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழபுரம். வடநாட்டுப் போரில் அடைந்த வெற்றியின் அடையாளம். இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர். இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சிங்கத் தலை கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்கள் இந்தக் கோயிலில் உள்ளன. சோழர்களின் பழமையான சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனிப்பெருமை உண்டு.

ஏலாக்குறிச்சி - அடைக்கலமாதா கோயில்

'தேம்பாவணி' எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம். ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட இந்தக் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார், 1711 இல் ஏலாக்குறிச்சியில் இதை உருவாக்கினார். இங்குள்ள அடைக்கலமாதா சொரூபம் லண்டன் மாநகரில் இருந்து கொண்டு வரப்பட்டது. பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ. திருச்சியில் இருந்து 80 கி.மீ. சென்னையில் இருந்து 375 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஏலாக்குறிச்சி. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்தத் தெய்வீக சிறப்பு பெற்ற தேவாலயத்தைச் சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இந்த மாதா கோயிலுக்கு சோழ மன்னன் நிலக்கொடை அளித்ததை அறிவிக்கும் கல்வெட்டு சாசனம் ஏலாக்குறிச்சியின் மற்றுமொரு சிறப்பு. தொலைபேசி - 621715.

ஜெயங்கொண்டம்

நெல்லிமண கிராமம் என்றால் யாருக்கும் புரியாது. ஜெயங்கொண்டம் என்றால் புரிந்துவிடும். இவ்வூரின் இயற்பெயர் இதுதான். இங்குள்ள சிவன் கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லிமரம் என்பதால் ஊர்ப் பெயரில் நெல்லியும் சேர்ந்து கொண்டது. தனது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றுவதற்கு முன்னால் இராஜேந்திர சோழன் ஜெயங்கொண்டம் என்ற பெயரை இந்த ஊருக்கு வைத்தான். கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜெயங்கொண்டம் எல்லோரும் கண்டிப்பாக போய்ப் பார்க்க வேண்டிய சோழர் காலக் கலை நகரம்.

மாளிகை மேடு

இந்த மாளிகை மேடு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ளது. தொல்லியம் துறையின் அகழ்வாய்வுகள் முதலாம் இராஜேந்திர சோழனின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் தொல்லியல் துறை இந்த இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மாமன்னர்கள் கால்பதித்த மாளிகை மேட்டிலும் நம் கால் பதிய வேண்டாமா?        

காரைவெட்டி பறவைகள் சரணாலயம்

பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம். இதன் மொத்தப் பரப்பு 454 ஹெக்டர். காலிமர் பறவைகள் சரணாலயத்துக்கு அடுத்து இந்தச் சரணாலயம்தான் பெரும்பாலான நீர்ப்பறவைகளைக் கவரக் கூடியது என்ற புகழுக்குரியது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் பறவைகள் இங்கு வருகை தரும். அந்தக் காலங்களில் பறவைகள் நீரில் வண்ண ஓவியங்களாகத் தெரியும். நீர்வண்ண ஓவியங்கள்!

திருமானூர்

திருமான் ஊர் திருமானூர். ஒரு கலைமானுடன் நடராசர் நாட்டியம் ஆடியதாக உள்ளூரில் புராணக் கதை ஒன்றுள்ளது. அதனால் இந்தப் பெயர் வந்ததாக வரலாறு. இராஜராஜ சோழன் பெரம்பலூரிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் வழியில் 20 அடி உயரம் உள்ள ஒரு சிலையைவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. வருடத்தில் சில நாட்கள் சூரியக் கதிர்கள் கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே விழும். சோழர்கால வரலாற்றின் காலச் சுவடுகள் பதிந்த ஊர் இது. ஒருமுறை பார்த்தால்தான் என்ன குறைந்துவிடப் போகிறது.

திருமழப்பாடி

ஊருக்கொரு புராணக் கதையோ, வாய்மொழிக் கதையோ இருக்கிறது. அப்படியொரு கதை இந்த ஊருக்கும் உண்டு. இங்கு பிரபலமான புராணக்கதை ஒன்று உலவுகிறது. தாளவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் மார்க்கண்டேய முனிவருக்காக மற்றோரு பிரபஞ்ச நடனத்தை வைகாசி மாதம் பௌர்ணமி அன்று அருளுவதாக நடராசர் வாக்கு தந்தாராம். ஏனெனில் சிதம்பரத்தில் நடராசர் ஆடிய ஆதி தாண்டவத்தை காணமுடியவில்லையாம். எனவே இந்த ஊர் திரு-மழ-பாடி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் திருக்குளத்தில் குளித்தால் தொழுநோய் தீரும். பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காமரசவல்லி

தஞ்சை மாவட்டத்தைப் போலவே சோழர் காலத்து பிரமாண்ட எழில் நிறைந்த கோயில்களைக் கொண்டுள்ளது அரியலூர் . இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான ஆதாரங்கள் இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டன. இங்கு அப்பர் சுவாமிகள் மேளத்துடன் சாக்கைய கூத்து ஆடிய நிலையில் காணப்படுகிறார்.

கள்ளன் குறிச்சி கோயில்

இவ்வூர் ஒரு சிறு கிராமம். ஆனால் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பரிச்சயமான கிராமம். இங்குதான் கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அரியலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கள்ளன் குறிச்சி உள்ளது.

மேலப்பழுவூர்

தமிழ்த் துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்துள்ள ஊர் இது. அரியலூர் - திருச்சி சாலையில் அமைந்திருக்கிறது. மேலப்பழுவூருக்கு வரலாற்றில் முக்கிய இடமுண்டு. இந்தப் பகுதியில் தலைவராக ஆட்சி புரிந்துள்ள பழுவேட்டரையரின் தலைமையகமாக விளங்கியுள்ளது. இங்குள்ள குடைவரைக் கோயிலான விஷ்ணு கோயில் மனத்தைக் கவரக் கூடியது. இக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளியன்று பூஜைகள் நடக்கும்.

 

Thanks to : Author – Unknow.

&

https://www.facebook.com/gmazhagar/posts/867255333355340