கோவில் கும்பாபிஷேகம்

Monday, August 3, 2015

மானாவாரி கடலை சாகுபடியாளருக்கு மானியத்தில் நல உதவிகள் பயன்பெற அழைப்பு

மானாவாரி கடலை சாகுபடியாளருக்கு மானியத்தில் நல உதவிகள் பயன்பெற அழைப்பு

பதிவு செய்த நேரம்:2015-08-01 11:30:56

VIDEO : Police arrest dreaded Maoist commander in Jharkhand

அரியலூர், :  அரியலூர் மாவட்டத்தில் மானாவாரியில் கடலை விதைக்கும் கருவிக்கொண்டு விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால் இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைைம வகித்த கலெக்டர் சரவணவேல்ராஜ் பேசியதாவது:இம் மாவட்டத்தில் இம்மாதம் வரை பெறப்பட்ட மழையை கொண்டு மானவாரிப் பயிர்களான கடலை, உளுந்து, மக்காசோளம், கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றை பயிரிட இதுவே ஏற்றத் தருணமாகும். மானாவாரியில் கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடலை விதைக்கும் கருவிக்கொண்டு கடலை மற்றும் ஊடுபயிராக துவரை விதைப்பு செய்ய விதைப்பு மானியம் ரூ.ஆயிரம் எக்டருக்கு பின்னேற்பாக வழங்க தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்ட எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்திற்கு பொருள் இலக்கீடாக ஆயிரம் எக்டருக்கு, பின்னேற்பு மானியத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முறையில் கடலை விதைப்பு செய்யும் விவசாயிகள் தங்களின் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் கடலை விதைக்கும் போது எடுக்கப்படும் புகைப்படம் ஆகியவற்றுடன் பின்னேற்பு மானியத்தொகை பெறுவதற்கான உரிய படிவத்தில் பூர்த்திசெய்து தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் அளித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். மேலும், இந்த இலக்கீடானது அரியலூர் வட்டாரத்துக்கு 200 எக்டேரும், ஜெயங்கொண்டம் வட்டாரத்துக்கு 300 எக்டேரும், ஆண்டிமடம் வட்டாரத்துக்கு 300 எக்டேரும், தா.பழூர் வட்டாரத்துக்கு 200 எக்டேரும் வீதம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

கடலை விதைக்கும் கருவிக்கொண்டு விதைப்புசெய்ய குறைவான நேரமே ஆகும். கூடிய ஆட்கள் தேவை மற்றும் செலவு குறைக்கப்படுகிறது. பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. சரியான ஆழத்தில் விதைக்கப்படுவதால் நல்ல முளைப்பு திறனும், பயிர் போதுமான இடைவெளியுடன் இருக்கும். மேலும், களைமுளைப்புத் திறனும் குறைக்கப்படுகிறது. கைக்களை எடுப்பதில் சிரமம் ஏற்படுவதில்லை. எனவே இத்திட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் வட்டார விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.கூட்டத்தில் டிஆர்ஓ ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், வேளாண் இணை இயக்குநர் (பொ) மனோகரன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் அருகே வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

அரியலூர் அருகே வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

அரியலூர் அருகேயுள்ள வைப்பம் கிராமத்தில் கிராம பொது சேவை மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.

கிராம பொது சேவை மையம்

அப்போது, அரியலூர் அருகேயுள்ள வைப்பம் மற்றும் ஆரனூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிம் மனு கொடுத்தனர். அதில், அரியலூரில் உள்ள இடையத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இடையத்தாங்குடி, வைப்பம், ஆரனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இடையத்தாங்குடி ஊராட்சியில் கிராம பொது சேவை மைய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கட்டிடம் கட்டுவதற்கு தகுதியான இடம் இடையத்தாங்குடி கிராமத்தில் இல்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டு, வைப்பம் கிராமத்தில் கிராம பொதுசேவை மையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்ளக்கூடிய நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இடையூறு செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த பொது சேவை மைய கட்டிடத்தை தங்களது ஊரில் (வைப்பம்) கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சமுதாய கூடம்

செந்துறை அருகே வீராக்கன் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அனைத்து சமுதாயத்தினரும் பயனடையும் வகையில் தங்களது பகுதியில் சமுதாயக்கூடம் கட்டுதவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
 

இதேபோல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறினார். மேலும் இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 12 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.26 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் உள்பட மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், புதுவாழ்வு திட்ட அலுவலர் சுதாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.