கோவில் கும்பாபிஷேகம்
Monday, August 14, 2017
பனங்கூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
பனங்கூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
By DIN | Published on : 05th February 2017 01:16 AM | அ+அ அ- |
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த பனங்கூர் கிராமத்தில், அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில் சீமைகருவேல மரங்களை அகற்றி, புதிய மரக்கன்றுகள் நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மனிதவள அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் சிறப்புரையாற்றி பேசுகையில், சீமைகருவேல மரங்களால் பொதுமக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இச்செடியானது ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்வரத்தை உறிஞ்சும் தன்மையுடையது. எனவே, மனிதவள அறக்கட்டளை சார்பில் இச்செடிகளை அகற்ற முன்வந்துள்ளோம். இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெரும் பங்கெடுத்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். மனிதவள அறக்கட்டளை பொருளாளர் ஜெகதீசன் மற்றும் சுற்றுவட்டார பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மனிதவள அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் சிறப்புரையாற்றி பேசுகையில், சீமைகருவேல மரங்களால் பொதுமக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இச்செடியானது ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்வரத்தை உறிஞ்சும் தன்மையுடையது. எனவே, மனிதவள அறக்கட்டளை சார்பில் இச்செடிகளை அகற்ற முன்வந்துள்ளோம். இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெரும் பங்கெடுத்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். மனிதவள அறக்கட்டளை பொருளாளர் ஜெகதீசன் மற்றும் சுற்றுவட்டார பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)