கோவில் கும்பாபிஷேகம்

Sunday, February 20, 2011

Thirukkural Kural 21.02.11 (குறளின் குரல் - 21.02.11)

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்.

என்பு இலதனை வெயில் போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.

விளக்கம்:

எலும்பு இல்லாத புழுக்களின் உடம்பை வெயில் காய்ந்து வருத்தும். அதுபோல அன்பு இல்லாத உயிர்களை அறமானது வருத்தி வதைக்கும்.

 

அன்பு இல்லாதவர்கள் அறம் எதுவென்று அறிந்து கொண்டு செயலாற்ற முடிவதில்லை. அன்பும் அறமும் வேறு வேறாகப் பிரித்துப் பார்க்க முடியாதவை. அன்பு உயிர்களின் ஆற்றலை வளர்க்கும். அன்பு, அறத்தின் வழி உயிரை நடத்தித் துன்பங்கள் தாங்கிக் கொள்ளும் ஆற்றலைத் தரும். அன்பு இல்லாதபோது அறம் இன்றிப் போகும். அந்த நிலை உயிர்களை வாட்டி வதைக்கும்.

Nandri : மலர்சபா

Sunday, February 6, 2011

குறளின் குரல் - 07.02.11

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 115. அலர் அறிவுறுத்தல்
குறள் எண்: 1144

கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
றவ்வென்னுந் தன்மை யிழந்து.

கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல்,
தவ்வென்னும், தன்மை இழந்து.

விளக்கம்:

ஊரார் எம் காதலைப் பழித்துப் பேசுவதால் என்னுடைய காதல் உணர்வானது மேலும் மேலும் வளர்ந்து இன்பம் தருகிறது. அந்தப் பழிச்சொல் மட்டும் இல்லையென்றால் இன்பம் தரும் தன் தனித்தன்மையை இழந்து, அக்காதல் உணர்வு குறைந்து சுவையற்றதாகிவிடும்.

 

 பழிச்சொல்லும் காதல் உணர்வை வளர்த்து இன்பம் தரும் விந்தை காதலில் மட்டுமே சாத்தியம்.


 

அலர்மகிழ்ச்சி, மலர்ந்த பூ, நீர், மஞ்சள், மிளகுக்கொடி, (இங்கே) பழிச்சொல்

உடன்போக்காகத் தலைவி தலைவனுடன் சென்ற பிறகு அவளது களவு வாழ்க்கையைப் பற்றி அயலவர் பலரும் அறிந்து கொள்வர். அதன் தொடர்ச்சியாய் அது பற்றியே பேசுவர். அதற்கு அலர் என்று பெயர்.

 

கவ்வை - ஒலி, துன்பம், பொறாமை, கவலை, கள், செயல், எள் இளங்காய், ஆயிலியம், துன்பம், பழிச்சொல்

 

தவ்வுதல் குறைதல்

 

Nandri : malar

 

Thursday, February 3, 2011

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை

 

வேலூர், பிப். 3: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 வயது முதல் 28 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் போன்றவற்றின் உண்மை நகல்கள், நீலநிறப் பின்னணியுடன் எடுக்கப்பட்ட 5 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் "தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை' என்ற முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

 

விவரங்கள் அறிய www.omcoomanpower.com என்ற இணைய தளத்திலோ அல்லது 044 24464268, 24464269, 9952940460 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tuesday, February 1, 2011

குறளின் குரல் - 02.02.11

பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: 80. நட்பாராய்தல்
குறள் எண்: 796

கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.

கேட்டினும் உண்டு ஓர் உறுதி, கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

விளக்கம்:

ஒருவனுக்குத் துன்பம் வந்த போதும், அத்துன்பத்தால் ஒரு நல்ல பயனுள்ளது. அது தன்னைச் சூழ்ந்துள்ள நட்பின் தன்மையைப் புரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாகும். நண்பர்கள் தன்னிடம் எந்த அளவு அன்புடையவர்களாய் இருக்கிறார்கள் என்று நன்றாக அளந்து அறிய ஓர் அளவுகோல் ஆகும் அத்துன்பம்.

 

துன்பம் வரும்போது, சுற்றியுள்ளவர் ஒவ்வொருவராக நீங்குவர். உண்மையான அன்புடையவரே இறுதி வரை உடன் நிற்பர். இங்ஙனம் ஒருவனுக்கு வரும் துன்பம், உண்மையான அன்பை அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.

Nandri : மலர்சபா