கோவில் கும்பாபிஷேகம்

Thursday, February 3, 2011

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை

 

வேலூர், பிப். 3: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்துக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 வயது முதல் 28 வயதுக்குட்பட்ட பொதுப் பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் போன்றவற்றின் உண்மை நகல்கள், நீலநிறப் பின்னணியுடன் எடுக்கப்பட்ட 5 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் "தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை' என்ற முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

 

விவரங்கள் அறிய www.omcoomanpower.com என்ற இணைய தளத்திலோ அல்லது 044 24464268, 24464269, 9952940460 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க