கோவில் கும்பாபிஷேகம்

Monday, March 30, 2015

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: ஏப்.1 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: ஏப்.1 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

 

By அரியலூர்,

First Published : 30 March 2015 02:01 AM IST

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 1 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் "தன்னார்வ பயிலும் மையத்தின்' மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடத்துக்கு வருகிற மே 23 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில விரும்புபவர்கள் தங்களது பெயரை மார்ச் 30 (திங்கள்கிழமை) ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Nandri : dinamani

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க