கோவில் கும்பாபிஷேகம்

Saturday, July 16, 2016

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு

By அரியலூர்

First Published : 17 July 2016 01:26 AM IST

 

பொய்யூர் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.நானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள்.

 

இவரது மனைவி சத்யா(35). சனிக்கிழமை இரவு சிவபெருமாள் தனது மனைவி சத்யாவை அழைத்துக் கொண்டு பொய்யூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாம்.

 

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சத்யா மீது லாரியின் பின்பக்கச் சக்கரம் ஏறியது.

 

இதில்,சத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவபெருமாள் அருகில் உள்ள அரசு ஆரம்பு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

 

கீழப்பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க