கோவில் கும்பாபிஷேகம்

Saturday, September 11, 2021

வயலுக்குச் சென்ற விவசாயின் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வயல் ஆலந்துறையார் கட்டளை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாள் தனது வயலுக்கு சென்று விட்டு அந்த சாலையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி கலியபெருமாள் மீது மோதி விட்டது.

இதில் பலத்த காயமடைந்த கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கலியபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லுகிற வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியபெருமாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க