சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு
First Published : 04 Jun 2009 11:57:47 AM IST
அரியலூர், ஜூன் 3: அரியலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் அனில்மேஷ்ராம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் திட்ட அலுவலர் எஸ்.வெங்கடாசலம், கிராமத்தில் ஊராட்சியின் மூலம் சாலை மேம்பாட்டு பணிகள், ஊரக கட்டமைப்புப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகள் குறித்துப் பேசினார்.
விழாவில் ரூ 1.63 லட்சத்தில் 22 நபர்களுக்கு பட்டா மாற்றம், இந்திராகாந்தி முதியோர் உதவித் தொகை ஆணை 22 பேருக்கு, ஊனமுற்றோர்க்கான உதவித் தொகை 2 பேருக்கு உள்ளிட்ட 63 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அனில்மேஷ்ராம் வழங்கினார்.
விழாவில் பிற்பட்டோர் நல அலுவலர் கே. சீனிவாசன், மகளிர் திட்ட அலுவலர் எஸ். வசந்தா, கோட்டாட்சியர் ஆர். சுதர்சனம், வட்டாட்சியர் எம். எட்டியப்பன், சமூக நலத் துறை வட்டாட்சியர் கே. காசி, ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் எம். மகேஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.
Nandri : www.dinamani.com
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=69168&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க