பொங்கல் விளையாட்டு: நாளை இறுதிப்போட்டி
ஜனவரி 16,2010,00:00 IST
அரியலூர்:பொங்கல் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை (17ம் தேதி) நடக்கிறது.அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்ட ஊராட்சிகளான ஆலந்துறையார் கட்டளை, மேலக்கருப்பூர், கடுகூர், காவலூர், வெங்கடகிருஷ்ணாபுரம், சுண்டக்குடி, உட்பட பல ஊராட்சிகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள் பெண்கள் இருவரும் சதுரங்கம், கேரம், நூறு மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கைப்பந்து போட்டியில் சீனியர் ஆண்களும், டென்னிகாய்ட் போட்டியில் ஜூனியர் மகளிரும் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டி நாளை( 17ம்தேதி) நடக்கிறது.
Nandri: www.dinamalar.com
http://www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=290199&ncat=Ariyalur
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க