கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, February 3, 2015

குரூப் 1 தேர்வில் வென்றோருக்குப் பாராட்டு

குரூப் 1 தேர்வில் வென்றோருக்குப் பாராட்டு
By
அரியலூர்
First Published : 02 February 2015 01:59 AM IST


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் அரியலூரைச் சேர்ந்த 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி சார்பில், துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 79 பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் அரியலூர் ஏகேஎம் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற தினேஷ், செந்தில், முத்தமிழ்ச்செல்வன், கலையரசன், இலுப்பையூர் சின்னத்துரை, பொய்யாதநல்லூர் சிவராமகிருஷ்ணன், கரைவெட்டிபரதூர் பிரபாகரன்,

காட்டுப்பிரிங்கியம் சுதா, மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பயிற்சி மைய நிறுவனர் கதிர். கணேசன் பாராட்டினார்.

 

Nandri : Dinamani

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க