கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, February 3, 2015

மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

By அரியலூர்,
First Published : 02 February 2015 01:56 AM IST

அரியலூர், மாவட்டம், கீழப்பழூவூர் காவல் சரகம்,சுண்டக்குடி காலனித் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (55). இவரது மகன் பாஸ்கர் (35). இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளிகள்.

இவர் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்ததால், இவரது மனைவி லெட்சுமி தனது 2 குழந்தைகளுடன், தனது தாய் வசிக்கும் நாகமங்கலத்துக்குச் சென்று விட்டார். பெருமாளும், பாஸ்கரும் ஒரே வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தனது மகனிடம் வீட்டுக்கு கூரை போடுமாறு கூறியுள்ளார், ஆனால் தன்னிடம் பணமில்லை என்று பாஸ்கர் கூறியதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பெருமாள் மூங்கில் குச்சியால் தாக்கியதில் பாஸ்கர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழூவூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரபிரகாஷ் வழக்குப் பதிந்து பெருமாளை கைது செய்தார்.

 

Nandri : Dinamani

 

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க