கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, July 15, 2014

பழைய செய்தி.... அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

பழைய செய்தி.... இப்போதான் பார்த்தேன்....

அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 25,2014, 3:00 AM IST பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 25,2014, 1:53 AM IST
அ.தி.மு.க அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கியும், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சந்திரகாசிக்கு மகத்தான வெற்றியினை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தெருமுனை பிரசார கூட்டம் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள சுண்டக்குடி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அரியலூர் ஒன்றிய செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார்.தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், சந்திரகாசி எம்.பி. ஆகியோர் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கியும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பேசினர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர் கவிதாசிவப்பெருமாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சிவசங்கர்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தாமரை.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

 

Nandri : http://www.dailythanthi.com/News/Districts/2014/06/25015313/Digg-Meeting-Street-Propaganda.vpf

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க