கோவில் கும்பாபிஷேகம்

Monday, December 11, 2017

பருத்தி பயிருக்கு மருந்து அடித்த 2 பேர் மயக்கம்

பருத்தி பயிருக்கு மருந்து  அடித்த 2 பேர் மயக்கம்

By DIN  |   Published on : 12th December 2017 08:18 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திங்கள்கிழமை பருத்தி பயிருக்கு மருந்து அடித்த 2 பேர் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமானூர் பகுதிகளில் மானாவாரிய பயிர்களான பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உயர்ந்து வளரக்கூடிய பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இதன் மீது அடிக்கப்படும் மருந்து, விவசாயிகள் மீது பட்டு அவர்கள் மயக்கமடைந்து வருவது தொடர்கிறது.
இந்நிலையில், கல்லக்குடியைச் சேர்ந்ந்த விவசாயி முருகேசன்(58) என்பவர் தனது வயலில் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு திங்கள்கிழமை மருந்து அடிக்கும் போது மயக்கமடைந்துள்ளார். இதேபோல் ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன்(47) என்பவரும் பருத்திக்கு மருந்து அடிக்கும் போது மயக்கமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க