கோவில் கும்பாபிஷேகம்

Sunday, December 17, 2017

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம் - ஆலந்துறையார் கட்டளை

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம்

By DIN  |   Published on : 18th December 2017 05:36 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம் செந்துறை, உஞ்சினி, ஆலந்துறையார் கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேசன், இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலைத் தலைவர் எம். சுந்தரமூர்த்தி, சுரங்கத் தலைவர் ஜி. ரகுநாதன் சிங் ஆகியோர் தலைமை வகித்து, தூய்மை இந்தியா திட்டம், சுரங்கப் பராமரிப்பு ஆகியவை குறித்து தொழிலாளர்களிடம் விளக்கினர். மேலும் அவர்கள் சுரங்கத்தைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களிடம் நன்னடத்தை குறித்து விளக்கினர்.
சுரங்கப் பொதுமேலாளர் ஏ.மரிய பார்லாண்ட், கணக்கியல் துறை பொதுமேலாளர் எம்.ஜெயப் பிரகாஷ் காந்த், சுற்றுச்சூழல் துறை மேலாளர் பி. தனபாலன் மற்றும் சுரங்க அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க