புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்
அரியலூர், மார்ச் 8: அரியலூர் தொகுதிக்குள்பட்ட 12 கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து, புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி, மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
அரியலூர் தொகுதிக்குள்பட்ட அயன்ஆத்தூர்- கிளிமங்களம்- அய்க்கால் வரை உள்ள சாலை, ஆனந்தவாடி கிளிமங்களம்-காவனூர்- அம்பாபூர் சாலை, அரியலூர்- ராவுத்தன்பட்டி- அயன்ஆத்தூர் இணைப்புச் சாலை, ராயம்புரம்- காவேரி பாளையம்- கடுகூர் வரை உள்ள சாலை, மணக்கால்- வெண்மணி இணைப்புச் சாலை, கோவிந்தாபுரம்- மணக்கால்- நல்லாம்பத்தை- ஓ.கூத்தூர் வரையுள்ள இணைப்புச் சாலை, ஓட்டக்கோயில்- சாளையக்குறிச்சி- காவேரிபாக்கம் வரை உள்ள சாலை, அரியலூர்- அம்மாக்குளம்- பொய்யூர் வரையிலான சாலை, குறிச்சிநத்தம்- புதுப்பாளையம் சாலை, கோப்பிலியன்குடிகாடு- பெரியநாகலூர் சாலை, சீனிவாசபுரம்- மொரக்குழி- பொய்யூர் வரையிலான சாலை ஆகிய கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து, புதிய சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்துத் தர வேண்டும்.
கல்லகம்- திருமழபாடி சாலையில் வெங்கனூர்- கோவில்எசனை கிராமங்களுக்கிடையில் உள்ள ஆண்டி ஓடைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர வேண்டும்.
அரியலூர் தொகுதிக்குள்பட்ட பழைய மாவட்ட சாலைகளான மேலக்கருப்பூர்- ஏலாக்குறிச்சி சாலை, மேலக்கருப்பூர்- விழுப்பனாங்குறிச்சி சாலை, அரியலூர்- பொய்யூர் சாலை, பொய்யூர்- சுண்டக்குடி சாலை உள்ளிட்ட சாலைகளை பிரதான மாவட்டச் சாலைகளாக தரம் உயர்த்தி இருவழிப் பாதைகளாக மாற்ற வேண்டும்.
அரியலூர் தொகுதியில் உள்ள 5 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள ஒன்றியச் சாலைகள் அனைத்தையும், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சேர்த்து மேம்பாடு செய்ய வேண்டும்.
அரியலூர் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய சாலைகளான சுண்டக்குடி- ஓரியூர் சாலை, சுண்டக்குடி- சிலுப்பனூர் சாலை, அரியலூர்- முட்டுவாஞ்சேரி சாலை, திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செம்மந்தங்குடி செல்லும் சாலை, பொய்யூர்- சுண்டக்குடி- வைப்பம் செல்லும் சாலை, கருவிடைச்சேரி செல்லும் சாலை, ஓட்டக்கோயில்- ஓ.கூத்தூர் செல்லும் சாலை, அரியலூர்- ஒ.கூத்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளை நெடுஞ்சாலைத் துறையின் கீழ் எடுத்து மேம்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------
நன்றிகள் கட்டுநாட்டின் தளபதிக்கு. மதிப்புக்குரிய பாளை அமரமூர்த்தி அவர்களுக்கு நீங்கள் பொய்யூர்- சுண்டக்குடி சாலை புரனமைக்க எடுத்துள்ள முயற்சிக்கு கட்டுநாட்டின் சார்பாக நன்றிகள் தெரிவித்கொல்லுகிறேன்.
---------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க