அரியலூர், மார்ச் ௬ 2010: அரியலூர் அருகேயுள்ள ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் குடிசை வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் ராஜீவ் காந்தி தேசிய மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசைகளில் வாழும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விழாவுக்கு, மின் வாரிய செயற்பொறியாளர் பி. விருத்தாசலம் தலைமை வகித்தார். திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், உதவிச் செயற்பொறியாளர்கள் ஜெ. ராஜேந்திரன், எஸ். சுரேஷ்குமார், மின் வாரியப் பணியாளர்கள் அருள் சகாயராஜ், திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி, புதிய மின் மாற்றியை தொடக்கிவைத்து, இலவச மின் இணைப்புத் திட்டத்தைத் தொடக்கிவைத்தார். மேலும், பயனாளிகளுக்கு மின் உரிம அட்டைகளை வழங்கினார். ஊராட்சித் தலைவர் க. சுப்பிரமணியன், துணைத் தலைவர் வி. குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.
நன்றி : தினமணி
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க