கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, March 30, 2010

ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் குடிசைகளுக்கு இலவச இணைப்பு

ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் குடிசைகளுக்கு இலவச இணைப்பு 

அரியலூர்,​​ மார்ச் ௬ 2010:​ அரியலூர் அருகேயுள்ள ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் குடிசை வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ​ ​ ​ மத்திய அரசின் ராஜீவ் காந்தி தேசிய மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசைகளில் வாழும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

​ விழாவுக்கு,​​ மின் வாரிய செயற்பொறியாளர் பி.​ விருத்தாசலம் தலைமை வகித்தார். திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா.​ நடராஜன்,​​ உதவிச் செயற்பொறியாளர்கள் ஜெ.​ ராஜேந்திரன்,​​ எஸ்.​ சுரேஷ்குமார்,​​ மின் வாரியப் பணியாளர்கள் அருள் சகாயராஜ்,​​ திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாளை து.​ அமரமூர்த்தி,​​ புதிய மின் மாற்றியை தொடக்கிவைத்து,​​ இலவச மின் இணைப்புத் திட்டத்தைத் தொடக்கிவைத்தார்.​ மேலும்,​​ பயனாளிகளுக்கு மின் உரிம அட்டைகளை வழங்கினார்.  ஊராட்சித் தலைவர் க.​ சுப்பிரமணியன்,​​ துணைத் தலைவர் வி.​ குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.

நன்றி : தினமணி

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க