கோவில் கும்பாபிஷேகம்

Monday, January 1, 2018

மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம்  அமைக்க விண்ணப்பிக்கலாம்


சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் அமைக்கும் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் வகையில், ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் 1,820 மெ.டன் யூரியா, 803 மெ.டன் டி.ஏ.பி, 719 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1034 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல்விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 229 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 92 மெ.டன் என 321 மெ.டன் விநியோகம்  செய்யப்பட்டுள்ளது.

 தற்போது வேளாண் விரிவாக்க மையங்களில் 29 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 4 மெ.டன் ஆக மொத்தம் 33 மெ.டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளது.  தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகளை அமைக்கும் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு  மானியமாக வழங்கும் வகையில், ரூ.7.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

சிறு,குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் பாசனக் கருவிகளை தங்களது வயல்களில் நிர்மானித்துக் கொள்ள மானியம் வழங்கப்படும். 

விவசாயிகள் தங்கள் பங்குத் தொகை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு,குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த் துறையில் சான்று பெற்று பாசனக் கருவிகளை அமைக்க விண்ணப்பிக்க வேண்டும்.  
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளதற்கான சான்று உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் க.லட்சுமிபிரியா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க