கோவில் கும்பாபிஷேகம்

Thursday, January 18, 2018

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி வைக்க எதிர்ப்பு: பனகூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி வைக்க எதிர்ப்பு: பனகூர் கிராமமக்கள் உண்ணாவிரதம்



அரியலூர் அருகே சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் வெடிவைப்பதால் தங்களது வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து, பனங்கூர் கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

அரியலூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புச் சுரங்கம் பனங்கூர் கிராமப் பகுதியில் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கற்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்நிலையில், சுரங்கத்தில் சுண்ணாம்புக்கற்களை வெட்டிஎடுக்க அவ்வப்போது வெடி உபயோகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால்,பனங்கூர் கிராமத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படுவதாவும், பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வெடி சத்தத்தால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை என்றும், கிராமத்தில் உள்ள சாலையில் சுண்ணாம்புக் கற்களை ஏற்றி வேகமாகச் செல்லும் லாரிகளால் அதிகமான புழுதிகள் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகம்,தனியார் சிமென்ட் அலை நிர்வாகம் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பனங்கூர் கிராம மக்கள், புதன்கிழமை சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் சுண்ணாப்புக் கல் சுரங்க அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்படாத பொதுமக்கள் அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க