கோவில் கும்பாபிஷேகம்

Sunday, January 7, 2018

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம்


எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் மேல்நிலை தேர்ச்சி, பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பதாரர்கள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் எனில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2017 அன்று 45 வயதுக்குள்ளும், இதர அனைத்து  வகுப்பினர்க்கும் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது.

ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000- க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.
பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும்  கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் , வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் 28.2.2018-க்குள் முற்பகலில் வேலைநாள்களில் நேரில் புதிய விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என ஆட்சியர் க.லட்சுமிபிரியா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க