அம்மா திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்
அரியலூர் வட்டம், வாலாஜாநகரம், ஆலந்துரையார்கட்டளை, உடையார்பாளையம் வட்டம் எரவாங்குடி, இடங்கண்ணி, ஆண்டிமடம் வட்டம் அழகாபுரம், செந்துறை வட்டம் நக்கம்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்,சாதி சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க