கோவில் கும்பாபிஷேகம்

Monday, January 1, 2018

அடிப்படை வசதியில்லாத ஓரியூர் அரசுப் பள்ளி

அடிப்படை வசதியில்லாத ஓரியூர் அரசுப் பள்ளி

photo (C) - Google Search

அரியலூர் அருகேயுள்ள ஓரியூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எந்தவித அடிப்படை வசதியுமின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

அரியலூரை அடுத்த சுண்டக்குடி அருகே ஓரியூர் கிராமத்தில் 5 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்கப் பள்ளியில்,  100-க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர்.  இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  

குடிநீர் குழாய்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. 

பள்ளியில் இருக்கும் கழிவறைகள், முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இயற்கை உபாதையைக் கழிப்பதிலும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதுதவிர பள்ளி வளாகத்தினுள் புதர் மற்றும் முள்செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.  சுற்றுச்சுவர் இல்லாததால் இரவுநேரங்களில் சமூக விரோத செயல்கள்  நடைபெறுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல முறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. 
 எனவே, இனியாவது ஓரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க