கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, January 2, 2018

அரசு மருத்துவமனையில்  அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிப்பிரியா அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். 


கடந்த சில நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் திங்கள்கிழமை அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றார்.   அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக குடல்வால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர் அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்யுமாறு கூறினார்.

இதைத் தொடர்ந்து அன்றிரவு அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆட்சியர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள்,பொதுமக்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்ட ஆட்சியரின் செயல்  மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இதை அரசியல்வாதிகளும் கடைப்பிடித்தால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் என்கின்றனர் பொதுமக்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க